Search This Blog

Friday, 7 February 2014

சாமியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை: உ.பியில் பயங்கரம்

சாமியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை: உ.பியில் பயங்கரம்

மதுரா: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாமியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டப் பெண், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்தபோது மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இந்தக் கொலையால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
உத்தரப்பிரதேசம், மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் சாமியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சாமியார் மீது அப்பெண் போலீசில் புகார் அளித்தார்.
அதன் வழக்கு விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட சாமியார் கைது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்காக தனது தாயாருடன் நீதிமன்றம் வந்திருந்தார் அந்த பாதிக்கப்பட்டப் பெண். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே அப்பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில், சம்பவ இடத்திலேயே அப்பெண் பரிதாபமாக பலியானார்.
அப்பெண்ணின் தாயாருக்கும் குண்டடி பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment