கருணாநிதியின் 8 அடி முழு உருவ சிலை.. ஈரோடு மாவட்டத்தில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு நேற்று கோவையில் பல்வேறு நலத்திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் 8 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்துள்ளார்.தொடர்ந்து கொங்கு மாவட்டங்களில் அவர் தனி கவனம் எடுத்து நலத்திடங்கள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளை முன்னெடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி கொங்கு மண்டல வாக்குகளை பெறுவதற்கே இவ்வாறு அவர் செயல்படுவதாகவும் அரசியல் கூர்நோக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.