Search This Blog

Wednesday, 21 September 2022

கருணாநிதியின் 8 அடி முழு உருவ சிலை.. ஈரோடு மாவட்டத்தில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

     கருணாநிதியின் 8 அடி முழு உருவ சிலை.. ஈரோடு மாவட்டத்தில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு நேற்று கோவையில் பல்வேறு நலத்திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் 8 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்துள்ளார்.தொடர்ந்து கொங்கு மாவட்டங்களில் அவர் தனி கவனம் எடுத்து நலத்திடங்கள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளை முன்னெடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி கொங்கு மண்டல வாக்குகளை பெறுவதற்கே இவ்வாறு அவர் செயல்படுவதாகவும் அரசியல் கூர்நோக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.




Friday, 16 September 2022

புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


         புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிடுக! - அன்புமணி வலியுறுத்தல்! 

சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

                       இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 15 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் வெளியாகி உள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

     தமிழகத்தில் எந்த இடத்திலும் விதிப்படி மணல் அள்ளப்படவில்லை. அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடல்நீர் உட்புகுதல் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது நாட்டிற்கும், மக்களுக்கும் ஆபத்தானது.

       

    Friday, 9 September 2022

    ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு: தள்ளிப் போக காரணம் என்ன

    ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு: தள்ளிப் போக காரணம் என்ன?


    .பன்னீர் செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் எப்போது இணைவார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    ஓபிஎஸ் -சசிகலா சந்திப்பு (ops sasikala meet) தொடர்ந்து தள்ளிப் போவதற்கான காரணம் குறித்து இரு தரப்புக்கும் நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.

    •  அதிமுகவில் விரைவில் காட்சி மாற்றம்!



    அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணிக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ள போதும் ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் காட்சி மாறலாம் என்று எச்சரிக்கை உணர்வுடனே இருப்பதாக சொல்கிறார்கள்.


    •  ஓபிஎஸ் -சசிகலா சந்திப்பை தடுப்பது யார்?


    அதிமுகவின் பொதுச்செயலாளர் நான் தான் என சசிகலா கூறிவருகிறார். ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓபிஎஸ் கூறிவருகிறார். இருவரும் உச்ச பதவியை க்ளைம் பண்ணுவதால் யார் முதலில் இன்னொருவரை நேரில் சென்று சந்தித்தால் தனது பலம் குறைந்துவிட்டதான தோற்றம் உருவாகுமே என்று யோசிப்பதாக சொல்கிறார்கள்.

    அரசுப் பள்ளிகளில் செப்.15 முதல் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்?

    அரசுப் பள்ளிகளில் செப்.15 முதல் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

          

    தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது

    அதில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச் சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது

    Monday, 5 September 2022

    லண்டனுக்கு பறந்த அமைச்சர் ஐ.பெரியசாமி! கோட்சூட்டில் சும்மா ஸ்டைலா வைரலாகும் போட்டோ! என்ன காரணம்?

                                      லண்டனுக்கு பறந்த அமைச்சர் ஐ.பெரியசாமி! 

     கோட்சூட்டில் சும்மா ஸ்டைலா வைரலாகும் போட்டோ! 

    என்ன காரணம்?


    அமைச்சர் ஐ.பெரியசாமி இதற்கான லண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில்

     திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் லண்டன் வாழ் தமிழர்களால்

     செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்

     ஐ.பெரியசாமி கலந்து கொள்வதற்காக இங்கிலாந்தின் லண்டனுக்கு சென்றுள்ளார்.

     நேற்று இரவு 2 மணி அளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து

     லண்டன் கிளம்பி சென்றார். அவரை திமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.


    புதுமைப் பெண் திட்ட தொடக்க விழா

     

        புதுமைப் பெண் திட்ட தொடக்க விழாவில்        மாணவிகளுக்கு ஆட்டுக் குட்டி கதையை முதல்வர்                   மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் இன்று (செப்டம்பர் 5) காலை நடந்த அரசு நிகழ்ச்சியில் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகள் மத்தியில் பேசும் போது, ஆட்டுக்குட்டி கதை ஒன்றை கூறி அசத்தினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மந்தைகளில் இருந்து ஆட்டை ஓட்டி வரும் நபர், ஒரேவொரு ஆட்டை மட்டும் தனது தோளில் போட்டுக் கொண்டு வருவார். அந்த ஆடு நடக்க முடியாததாக இருக்கும். இல்லையெனில் காலிலே காயம்பட்டதாக இருக்கும்.

    அதுதான் சமூக நீதி என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இவ்வாறு தோளில் போட்டுக் கொண்டு வருவது ஆட்டிற்கு காட்டும் சலுகை அல்ல. அது மேய்ப்பவரின் கடமை. இத்தகைய கடமை இருப்பதால் தான் இந்த அரசு பல நல்ல திட்டங்களை தீட்டி வருகிறது என்று கூறினார். ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவிகள் உயர்கல்வி கற்பதற்கு புதுமைப் பெண் திட்டமானது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.


    Wednesday, 13 May 2015

    கர்நாடகா அப்பீல் செய்யாவிட்டால், தேமுதிக அதைச் செய்யும்... விஜயகாந்த் அறிவிப்பு

    கர்நாடகா அப்பீல் செய்யாவிட்டால், தேமுதிக அதைச் செய்யும்... விஜயகாந்த் அறிவிப்பு 

    Vijayakanth wants Karnataka to appeal in Jaya case

                             சென்னை: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் தேமுதிகவே அதைச் செய்ய நேரிடும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பில் தவறு நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில், வருமானம் மற்றும் கடன் கணக்கீடுகளில் தவறு நடந்திருப்பது தெள்ளத்தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிய வருகிறது. புடம் போட்ட தங்கம் என நம்பி நாம் வாங்குகிற பொன்நகைகள், சில சமயங்களில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பாடத்தை நமக்குத் தந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பிலும் அது தான் நடந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். உச்சநீதிமன்ற நீதியரசர்களால் பெரிதும் நம்பப்பட்ட, மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதியான குமாரசாமி அவர்கள் கணக்கீடுகளில் தவறு செய்திருக்கிறார் என்பது தற்செயலாக நடந்தது போல் தெரியவில்லை. மாறாக ஏதோ ஒரு அழுத்தத்தினால் இது நடந்திருப்பதாக யூகிக்க முடிகிறது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் பட்டு விடக் கூடாது என்பது நீதி நெறிமுறையில் நீண்ட காலமாக கடைபிடிக்கப் படும் ஒரு கோட்பாடு. ஒரு வேளை இந்த ஆயிரத்தில் ஒருவரோ இந்த ஜெயலலிதா, அதனால் தான் தப்பித்து விட்டாரோ என்று சட்ட வல்லுநர்களும், சமூக அக்கறையாளர்களும் சந்தேகிக்கிறார்கள். இதற்கு முன்பு அரசு ஊழியர்களான ஐபிஎஸ் அதிகாரி ஜெகன் சேஷாத்திரி வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக 3 அயிரம் ரூபாய் அவர் கணக்கில் இருந்தமைக்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது. அதேபோல், சுங்கத்துறை அதிகாரி புகழேந்தி என்பவர் சுமார் 90 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக அவர் கணக்கில் இருந்ததற்காக இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்து சேர்த்ததில் விலக்களிக்கப்பட்ட வழக்கின் விபரம் தெரிந்த நீதிபதிக்கு தண்டனை அளிக்கப் பட்ட வழக்கின் விபரம் மட்டும் தெரியாமல் போனது ஏன் ? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். பாமரரில் இருந்து பணக்காரர் வரை வாக்களித்து ஜெயலலிதாவை முதலமைச்சராக்கினால், அதிகார பலமும், பண பலமும் இருக்கின்ற மமதையில் எதையும் சாதித்து விடலாம் என்று நினைத்தால் எல்லாவற்றிற்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்பது இது போன்ற தருணங்களில் தான் நிரூபிக்கப் படுகிறது. ஜெயலலிதாவிற்கு எதிரான இந்த வழக்கில் 18 ஆண்டுகள் முடிவில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. மைக்கேல் டி குன்ஹா அவர்கள் ஆதார ஆவணங்களை அலசி ஆராய்ந்து, ஆய்வு செய்து வரலாற்று சிறப்புமிக்க 1000 பக்கம் கொண்ட தீர்ப்பை அளித்துள்ளார். அதனால் தான் அவரை நீதியரசர் என்று சொல்கிறோம். ஆனால், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி திரு.குமாரசாமி எதன் அடிப்படையில் இந்த மூன்று நிமிட தீர்ப்பை அளித்துள்ளார் ? இவரை நீதியரசர் என்று சொல்ல முடியுமா ? இது நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதென மக்கள் பேசுகிறார்கள். எனவே, இந்த வழக்கில் கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். இல்லையேல் அப்பணியை தேசிய முற்போக்கு திராவிடக் கழகமே மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.