சீன கடலில் மாயமான விமானத்தின் பாகங்கள் எதுவும் இல்லை: மலேசியா அறிவிப்பு - தொடரும் பெரும் குழப்பம்!
கோலாலம்பூர்: தென் சீன கடல் பகுதியில் மாயமான விமானத்தில் பாகங்கள் எதுவும் இல்லை என்று மலேசிய சிவில் விமான போக்குவரத்து துறை தலைவர் அசாருத்தீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் தென் சீன கடல் பகுதியில் சென்றபோது மாயமானது. அதில் இருந்து இன்று வரை விமானம் என்ன ஆனது, அதில் பயணித்த 239 பேரின் கதி என்ன என்று இதுவரை ஒன்றும் தெரியவில்லை.
இந்நிலையில் மலேசியா மற்றும் வியட்நாம் இடையேயான கடற்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா 3 செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டது.
இதையடுத்து சீன வெளியிட்ட புகைப்படங்களில் உள்ள இடத்தில் தேடியதில் விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று மலேசிய சிவில் விமான போக்குவரத்து துறை தலைவர் அசாருத்தீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பகுதியில் விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று வியட்நாம் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் உள்ள பயணிகளில் 154 பேர் சீனர்கள் என்பதால் சீன அரசு மலேசிய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment