Search This Blog

Friday, 9 September 2022

ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு: தள்ளிப் போக காரணம் என்ன

ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு: தள்ளிப் போக காரணம் என்ன?


.பன்னீர் செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் எப்போது இணைவார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் -சசிகலா சந்திப்பு (ops sasikala meet) தொடர்ந்து தள்ளிப் போவதற்கான காரணம் குறித்து இரு தரப்புக்கும் நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.

  •  அதிமுகவில் விரைவில் காட்சி மாற்றம்!



அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணிக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ள போதும் ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் காட்சி மாறலாம் என்று எச்சரிக்கை உணர்வுடனே இருப்பதாக சொல்கிறார்கள்.


  •  ஓபிஎஸ் -சசிகலா சந்திப்பை தடுப்பது யார்?


அதிமுகவின் பொதுச்செயலாளர் நான் தான் என சசிகலா கூறிவருகிறார். ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓபிஎஸ் கூறிவருகிறார். இருவரும் உச்ச பதவியை க்ளைம் பண்ணுவதால் யார் முதலில் இன்னொருவரை நேரில் சென்று சந்தித்தால் தனது பலம் குறைந்துவிட்டதான தோற்றம் உருவாகுமே என்று யோசிப்பதாக சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment