250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது பங்குச் சந்தை
மும்பை : கடந்த 2 வாரங்களுக்கு பிறகு ஆசிய சந்தைகளின் பங்குகள் இன்று உயர்ந்துள்ளன. இதன் எதிரொலியாக இன்றைய பகல் வர்த்தகத்தின் போது இந்திய பங்குச் சந்தைகள் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. காலையில் 132 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ், பகல் நேர வர்த்தகத்தில் 256.12 புள்ளிகள் உயர்ந்து 18,875.84 புள்ளிகளாகவும், காலையில் 26.35 புள்ளிகள் உயர்ந்து 5498.15 புள்ளிகளாக இருந்த நிப்டி மதிப்பு, பகலில் 70.40 புள்ளிகள் உயர்ந்து 5542.20 புள்ளிகளாக உயர்ந்தது. ஐ.டி., மற்றும் வங்கித்துறை பங்குகளின் உயர்வின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருந்த போதிலும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வங்கிகளில் பங்குகள் உயர்ந்துள்ளன.
No comments:
Post a Comment