Search This Blog

Sunday, 2 February 2014

துப்பாக்கி முனையில் சகோதரர் கண் முன்பு 18 வயது பெண் 4 பேரால் பலாத்காரம்

துப்பாக்கி முனையில் சகோதரர் கண் முன்பு 18 வயது பெண் 4 பேரால் பலாத்காரம்

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் 18 வயது பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் தனது சகோதரரின் கண் முன்பு 4 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் 18 வயது பெண் ஒருவர் தனது சகோதரருடன் கர்னல் என்ற இடத்தில் இருந்து சஹரன்பூருக்கு நேற்று கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் வழியில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளனர். வாகனத்தில் இருந்த 4 வாலிபர்கள் அந்த 2 பேரையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வயலுக்கு சென்றனர்.
வயலில் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் அவரது சகோதரரின் கண் முன்பே அந்த 4 வாலிபர்களும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து அந்த பெண் நடந்தது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரையும் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment