தூத்துக்குடியில் ரூ.6½ லட்சத்தில் பயணிகள் நிழற்குடை
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் சிதம்பரநகர், சத்திரம் பஸ்நிறுத்தம், தென்பாகம் காவல் நிலையம், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆகிய 4 இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ரூ.6½ லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் ஸ்டெர்லைட் நிறுவன முதன்மை செயல் அலுவலர் பி.ராம்நாத் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் மனிதவளத்துறை தலைவர் சுரேஷ்போஸ், திட்டங்கள் பிரிவு தலைவர் தனவேல், பொதுமேலாளர் குமாரகவந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கோவில்பட்டியில் மண்டல தேர்தல் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம்
விளாத்திகுளத்தில் மாட்டு
No comments:
Post a Comment