மும்பை தாதாக்களுடன் தொடர்பு : ஸ்ரீசாந்த் இனி தப்பிக்கவே முடியாது
எனவே எம்.சி.சி.ஓ.ஏ., மகாராஷ்ட்டிரா கன்ட்ரோல் ஆப் ஆர்கனைஸ்டு கிரைம் ஆக்ட் என்ற சட்டத்தின் படி இவர்கள் மீது வழக்குப்பதியப்படுகிறது. இதற்கென சிறப்பு கோர்ட்டில் மும்பை போலீசார் அணுகியிருக்கின்றனர்.
இந்த சட்டத்தின் படி சாமானியத்தில் ஜாமின் வழங்க முடியாது. மேலும் போலீஸ் கஸ்டடியில் 30 நாட்களுக்கு மேலாக வைத்து விசாரிக்க முடியும். இவர்களுக்கு எதிராக யாரும் வாக்குமூலம் கொடுத்தால் இது ஒரு முக்கிய சாட்சியாக எடுத்து கொள்ளப்படும். இந்த வாக்குமூலம் எந்தவொரு மாநிலத்தில் உள்ள மாவட்ட எஸ்,பி., அலுவலகத்தின் மூலம் பதிவு செய்ய முடியும்.
ஜாமின் மனு தள்ளுபடி: இதற்கிடையில் இன்று டில்லி கோர்ட்டில் தாக்கல் செய்த கிரிக்கெட் வீரர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வரும் 18-ம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment