Search This Blog

Sunday, 29 September 2013

யாருடன் கூட்டணி: வைகோ முடிவு!

யாருடன் கூட்டணி: வைகோ முடிவு!

‘‘ரவுடிகளை கண்காணிக்க உத்தரவிட்டிருக்கா ஓய்...’’ என்றபடி அடுத்த விவாதத்திற்குள் நுழைந்தார் குப்பண்ணா.
‘‘எங்கே வே...’’ எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
‘‘மதுரையில, பழிக்கு பழி கொலைகள் நடந்துண்டு இருக்கு... கொலையை நிறைவேத்த, சில ரவுடிகள், ஜாமின்ல போறா... கொலை, கொள்ளையை முடிச்சுட்டு, தலைமறைவாயிடறா... சமீபத்துல, கட்சி பிரமுகரின் உறவினர் கொலையில் சந்தேகப்படும் குற்றவாளி, சில நாளுக்கு முன்பு தான், சிறையிலிருந்து வெளியில் வந்தார்... இவர் வில்லங்கமான ஆளுன்னு புரிஞ்சுண்ட போலீசார், ‘அலர்ட்’ ஆனா... ஆனா, போலீசாருக்குத் தெரியாமலேயே, கொலை நடந்துடுத்து...
‘‘இனிமேலும், இப்படி விடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, ஜாமின்ல போற ரவுடிகளை, தொடர்ந்து கண்காணிக்கணும்ன்னு, உளவுத் துறைக்கு உத்தரவு போட்டிருக்கா ஓய்...’’ எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.
“மோசடிக்கு துணை போனவருக்கு, ஒரு கோடி லாபமாங்க...” என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.
“எந்தத் துறையில பா...” எனக் கேட்டார் அன்வர்பாய்.
“பத்திரப்பதிவு துறையில சொத்து விற்பனையை பதிவு செய்யணும்னா, நிலத்துக்கு இப்ப உள்ள கைடுலைன் வேல்யுவ மதிப்பிடணும்... அதேபோல, அங்க இருக்கும் கட்டடத்துக்கும் மதிப்பு போடணும்... இந்த ரெண்டு மதிப்பும் துல்லியமா இருக்கணும்கிறது விதி... ஆனா, ஸ்ரீபெரும்புதுார்ல, 110 கோடிக்கு ஒரு தனியார் கம்பெனி கைமாறினதுல, இந்த விதிகள் அப்பட்டமா மீறப்பட்டிருக்காங்க...
“மொத்தம், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்துக்கு, 30 கோடி ரூபாய் போட்டுட்டு, இயந்திரங்களை மறைச்சுட்டு கம்பெனி கட்டடத்தை கிடங்கா கணக்கு காட்டி பத்திரப்பதிவு செய்திருக்காங்க... இதனால, அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் கிடைக்கலைங்க... ஆனா, இதுக்கு துணை போன பெரிய அதிகாரிக்கு ஒரு கோடி ரூபாய் கைமாறியிருக்காங்க... துறை அமைச்சருக்கு கூட, தெரியாம நடந்த இந்த, ‘டீலிங்’ பத்தி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்காதான்னு பதிவுத்துறை தலைமை அலுவலகத்துல பேசிக்கிறாங்க...” என்று முடித்தார் அந்தோணிசாமி.
''பா.ஜ.,வுடன் கூட்டணி உண்டுன்னு மறைமுகமாக சொல்லிட்டாரு பா..." என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''யாருன்னு சொல்லும் ஓய்..." என்றார் குப்பண்ணா.
''ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் சமீபத்துல, தாயகத்துல நடந்துச்சு... அதுல பேசிய, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, ‘சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, நமது ரத்தத்தை சிந்தியிருக்கிறோம்... நம்மால் பயன்பட்டவர்கள் தான் உண்டு... நம்மை மதிக்கிற கட்சியோடு தான், இனிமேல் கூட்டணி’ன்னு சொல்லிட்டு, பா.ஜ., ஆட்சியை பற்றி பெருமையாக பேசினாரு... அவரது மறைமுகமான பேச்சு, பா.ஜ., கூட்டணியில, ம.தி.மு.க., இடம் பெற வாய்ப்பு இருக்குன்னு புரிஞ்சு போச்சு பா...’’ எனக் கூறி முடித்தார் அன்வர்பாய். டீ குடித்த நண்பர்கள் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது!

பா.ஜ., – அ.தி.மு.க., கூட்­டணி?

‘‘ஸ்பெஷல் இன்­வெஸ்­டி­கேஷன் டீம் அமைச்­சாங்­கன்னா, அதுக்­குன்னு தனி போலீசு போடக் கூடாதா...’’ என, கேள்வி எழுப்­பி­ய­ப­டியே, நாயர் கடைக்கு வந்தார்
அன்­வர்பாய்.
‘‘என்ன வே சொல்­லு­தீரு... எதுக்கு இப்ப, போலீசு...’’ எனக் கேட்டார் அண்­ணாச்சி.
‘‘இந்து அமைப்பு நிர்­வா­கிகள் கொலை வழக்கு, பெங்­க­ளூரு குண்­டு­வெ­டிப்பு வழக்­குல, தலை­ம­றை­வாக உள்ள, ‘போலீஸ்’ பக்­ருதீன் உட்­பட, சிலரைப் பிடிக்க, ஸ்பெஷல் இன்­வெஸ்­டி­கேஷன் டீமை, முதல்வர் ஜெ., துவக்­கி­னாங்க இல்­லியா... ஆனா, அதுக்­குன்னு, தனி போலீசை நிய­மிக்­க­வில்லை... சி.பி.சி.ஐ.டி., பிரி­வுல இருக்­குற போலீ­சாரை, இரவல் வாங்கி தான் சமா­ளிச்­சிட்டு வர்­றாங்க... எஸ்.ஐ.டி.,க்குன்னு, தனி போலீ­சாரை நிய­மிக்­கா­த­வரை, குற்­ற­வா­ளி­களை பிடிக்க முடி­யா­துன்னு, சக போலீ­சாரே பிர­சாரம் செய்­யாத குறையா பேசிட்­டி­ருக்­காங்க பா...’’ எனக் கூறி முடித்தார் அன்­வர்பாய்.
‘‘வெட்டு, குத்­துன்னு கிளம்­பினா, வெளியில தலை காட்ட முடி­யா­துங்­க­றது தெரிஞ்சும், சில பேரை மாத்த முடி­யல...’’ என, ‘திடுக்’ தக­வலை, மிகச் சாதா­ர­ண­மாகச் சொன்னார் குப்­பண்ணா. மூவரும் அதிர்ந்­தனர். ‘‘என்ன பா... யாரு இப்ப கிளம்பி இருக்­காங்க...’’ எனக் கேட்டார் அன்­வர்பாய்.
‘‘மது­ரையில், மாந­க­ராட்சி முன்னாள் மண்­டல தலை­வர்­களா இருந்த, தி.மு.க.,வின் வி.கே.குரு­சா­மிக்கும், அ.தி.மு.க.,வின் ராஜ­பாண்­டிக்கும் ஆரம்­பத்­தி­லி­ருந்தே ஆகாது ஓய்... தேர்­தல்ல ஆரம்­பிச்ச பகை, இன்னும் ஓயலை... .ரெண்டு தரப்­பிலும், மாறி மாறி வெட்­டிண்டு இருக்கா... இது­வரை, நாலு பேர் கொல்­லப்­பட்­டி­ருக்கா ஓய்...
‘‘சமீ­பத்தில், குரு­சா­மியின் தங்கை கண­வரை, எதிர்­த­ரப்­பினர், ‘போட்டு’ தள்­ளிட்டா... பதி­லுக்கு, இந்த சைடுல ஒருத்­தரை, ‘போட்­டு’ட்டா... இப்­படி மாறி, மாறி வெட்­டிண்டு இருக்­க­ற­த­னால, என்ன செய்­ய­ற­துன்னு போலீசார் திண­றிண்டு இருக்கா ஓய்... அடுத்­த­டுத்து கொலை அரங்­கே­றி­ய­த­னால, குரு­சா­மிக்கு, நெஞ்­சு­வ­லியே வந்­து­டுத்து... இத­னால, மருத்­து­வ­ம­னையில் பாது­காப்பா, ‘அட்மிட்’ ஆயிட்டார் ஓய்... முன்­னாடி, அழ­கிரி ஆத­ர­வா­ள­ராக இருந்த இவர், இப்போ ஸ்டாலின் ஆத­ர­வா­ள­ராக மாறிட்டார் ஓய்...’’ எனக் கூறி முடித்தார் குப்­பண்ணா.
மற்­ற­வர்கள் விக்­கித்து நின்­றனர்... நிலை­மையை சக­ஜ­மாக்க, அண்­ணாச்சி துவங்­கினார், கடைசி தக­வலை...
‘‘அ.தி.மு.க., – பா.ஜ., கூட்­டணி மல­ரு­மான்னு, அ.தி.மு.க.,வினர் எதிர்­பார்க்க ஆரம்­பிச்­சிட்­டாவ வே..." என்ற அண்­ணாச்­சி­யிடம், ‘‘என்ன சொல்றீர்... இவா தான், காங்­கி­ர­சுக்கு ரூட்டு போடறா மாதிரி தெரி­ய­றதே...’’ எனக் கேட்டார் குப்­பண்ணா.
‘‘விச­யத்தைக் கேளும் வே... திருச்­சி­யில நடந்த இளந்­தா­மரை மாநாட்­டுல, பா.ஜ., பிர­தமர் வேட்­பாளர் மோடிக்கு வந்த லட்­சக்­க­ணக்­கான தொண்­டர்கள் கூட்­டத்தை கண்டு, ஆளுங்­கட்­சி­யினர் மிரண்டு போயி­ருக்­காவ... மோடி கூட்­டத்­துக்கு வந்த நடு­நி­லை­யா­ளர்­களின் ஓட்­டுக்கள் ஏற்­க­னவே, ஆளுங்­கட்­சிக்கு விழக்­கூ­டிய ஓட்­டுகள் தான்... ஆனா, இந்த முறை மோடிக்கு தான் ஓட்டு போட­ணும்னு, முடிவு எடுத்­தி­ருக்­காவ... அதா­வது, பா.ஜ., யாரோட கூட்­டணி வைக்­குதோ, அந்த கட்­சிக்கு... இப்ப புரி­யுதா கணக்கு...’’ என்­ற­வாறே, நடையைக் கட்­டினார் அண்­ணாச்சி. மற்­ற­வர்­களும் கிளம்பினர்; பெஞ்ச் அமை­தி­யா­னது!

No comments:

Post a Comment