மீரட் கலவரம்: துணை ராணுவம் குவிப்பு
மீரட்: உ.பி.யில்முசாபர் கலவரத்தின் போது கலவரத்தினை தூண்டியதாக பா.ஜ. எம்.எல்.ஏ. சங்கீத்சிங்சோம் மீது வழக்குப்பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதனை கண்டித்து நேற்று மீரட் நகரில் , அவரது ஆதரவாளர்கள் பொதுக்கூட்டம்நடத்தினர். இதை போலீசார் தடுத்ததால் வன்முறை ஏற்பட்டது. அப்போது,போலீசார் தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து, வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 24 பேர் கைதாகினர். பாதுகாப்பிற்காக,இன்று பாராமிலிட்டரிபடையினர் குவிக்கப்பட்டு ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.அரசிற்கு கெட்டபெயர் ஏற்படுத்தவே இந்த வன்முறை என சமாஜ்வாதி க்ட்சித்தலைவர் முலாயம்குற்றம்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment