அ.தி.மு.க., வேட்பாளரை வைத்து ஆடு - புலி ஆட்டம் ஆடும் கட்சியினர்
தூத்துக்குடி : தூத்துக்குடி அ.தி.மு.க., வேட்பாளரை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடி வரும் மாவட்ட அ.தி.மு.க., வினர். பிரசாரத்தில் விறுவிறுப்பு இல்லை. தூத்துக்குடி அ.தி.மு.க., சார்பில் எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ஜெயசிங் தியாகராஜ நட்டர் ஜி இவர் வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளராக இருந்தாலும், கட்சியின் பொதுக்கூட்டங்கள், போராட்டங்களில் அதிகம் கலந்து கொள்வதில்லை. வெறும் பார்வையாளராக மட்டுமே அ.தி.மு.க., வில் இருந்து வந்துள்ளார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க., நிர்வாகிகள் தரப்பில் கடும் அதிருப்தி நிலவியது. இருந்தும் முதல்வர் "ஜெ' அறிவித்த வேட்பாளர் என்பதால் வேறு வழியின்றி பிரசாரங்களில் ஈடுபட முடிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.,வில், சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்கள் சார்பில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ.,வுமான செல்லப்பாண்டியன் முக்கிய நபராக இருந்து வந்தார். தற்போது புதியதாக எம்.பி., வேட்பாளராக ஜெயசிங் தியாகராஜநட்டர்ஜியை அறிவிப்பு செய்ததுமே நமக்கு கட்சியில் முக்கியத்துவம் போய்விடுமோ, என்பதால் தீவிரமாக பணிகளில் ஈடுபடவில்லை. பெயரளவிற்கு பங்கேற்றால் போதும், என்ற நிலையில் உள்ளார். மாவட்ட செயலாளரும், தற்போதைய அமைச்சருமான சண்முகநாதன் எம்.பி., வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும், இல்லாவிட்டால் தமது அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவி பறி போய்விடுமோ, என்ற அச்சத்தில் தேர்தல் பணியாற்றி வருகிறார்.அ.தி.மு.க., வில் அதிருப்தி கோஷ்டியாக ஒரு அணி தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த அணி எப்படியாவது, அ.தி.மு.க., வேட்பாளரை தோற்கடித்து, மாவட்ட செயலாளருளம், அமைச்சருமான சண்முகநாதனை பழி வாங்க வேண்டும், என ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். தூத்துக்குடி எம்.பி., தொகுதி ஆ.தி.மு.க., வேட்பாளர் நட்டர்ஜி இந்த ஆடுபுலி ஆட்டத்தில் சிக்கி தவித்து வருகிறார்.
No comments:
Post a Comment